ஐரோப்பாவிற்கு செல்ல முயன்ற நூறு குடியேறிகள் கடலில் மூழ்கிப் பலி
பிரசுரிக்கப்பட்டது
ஐரோப்பாவிற்கு செல்லும் வழியில் குடியேறிகள் சென்ற படகு ஒன்று சிக்கலுக்கு உள்ளானதில் அதில் பயணம் செய்த சுமார் நூறு பேர் காணாமல் போயுள்ளதாக லிபியா கடற்படை தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
பல்வேறு ஆஃப்ரிக்க நாடுகளை சேர்ந்த வெறும் 20 குடியேறிகளை மட்டுமே அவர்களால் காப்பாற்ற முடிந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.
லிபியா தலைநகர் திரிப்போலியின் கிழக்கில் உள்ள காராபுல்லியிலிருந்து இந்த ரப்பர் படகு புறப்பட்டுள்ளது.
கடலில் ஏற்பட்ட உயர் அலைகளில் சிக்கியதை தொடர்ந்து படகு புதன் கிழமையன்று மூழ்கிப் போனது.
மத்திய தரைக்கடலிலிருந்து ஐரோப்பாவுக்கு பயணம் மேற்கொள்பவர்களின் மிக மோசமான ஆண்டாக தற்போது 2016 ஆம் ஆண்டு உள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
இந்த பயணங்களின் போது, சுமார் 3,800க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




























