பிலிப்பைன்ஸ் தாக்குதலில் 36 பேர் பலி
பிரசுரிக்கப்பட்டது
பிலிப்பைன்ஸின் தலைநகர் மனிலாவில் ஒரு ஹொட்டலில் துப்பாக்கிதாரி ஒருவர் தாக்கியதில் முப்பத்தாறு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
தமது போராளிகளே இந்த தாக்குதலை நடத்தியதாக இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக்கொள்ளும் அமைப்பு கூறியுள்ளது.
ஆனாலும், இந்த தாக்குதல் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டதல்ல என்று போலிஸார் வலியுறுத்துகின்றனர்.
இந்த தாக்குதலுடன் தொடர்புபட்ட, பிலிப்பைன்ஸ் வாசி என்று நம்பப்படும் ஒருவரை தாம் தேடுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இவை குறித்த பிபிசியின் காணொளி.