வடகொரியா தடுத்து வைத்திருந்த அமெரிக்க மாணவர் காலமானார்
வடகொரியாவில் ஒன்றரை வருடகாலம் தடுத்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்க மாணவரான ஒட்டோ வோர்ம்பியர் மரணமடைந்தார்.
கோமா நிலையில் ஒரு வாரத்துக்கு முன்னர் தான் அவர் அமெரிக்கா வந்து சேர்ந்தார்.
அறிவிப்பு பலகை ஒன்றை ஒரு ஹொட்டலில் இருந்து திருடியதற்காக அவர் சிறையில் அடைக்கப்பட்ட சில நாட்களிலேயே அவர் சுகவீனம் அடைந்ததாகவும் பின்னர் தேறவில்லை என்றும் வடகொரியா கூறுகின்றது.
ஆனால், அவருக்கு கடுமையான தலைக்காயம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க டாக்டர்கள்
கூறுகின்றனர். அவரை வடகொரியா மோசமாக சித்ரவதை செய்திருப்பதாக அவரது பெற்றோர் கூறுகின்றனர்.
வடகொரிய ஆட்சியை கொடூர ஆட்சி என்று அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
இவை குறித்த பிபிசியின் காணொளி.
பிபிசியின் பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்