குடியேறிகளின் படகுகளை தீயிட்டு எரிக்கும் இத்தாலி

காணொளிக் குறிப்பு, குடியேறிகளின் படகுகளை தீயிட்டு எரிக்கும் இத்தாலி
பிரசுரிக்கப்பட்டது

லிபியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான கடல்வழி உலகின் ஆபத்தான குடியேற்ற வழியாக இது வர்ணிக்கப்படுகிறது.

இந்த கடல்வழியில் இந்த ஆண்டில் இதுவரை இரண்டாயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

எப்படியாவது ஐரோப்பாவுக்குள் நுழைய விரும்பும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளே இப்படி பலியானவர்கள்.

அப்படியானவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள Doctors Without Borders என்கிற தொண்டுநிறுவன கப்பலில் கடந்த ஒருமாதமாக இருக்கும் பிபிசி செய்தியாளர் அனுப்பிய பிரத்யேகச் செய்தித்தொகுப்பு.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :